News September 3, 2025
கோவையில் 2,000 பேருக்கு இலவச பட்டா: ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில், இலவச பட்டா கோரி விண்ணப்பித்த 2,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும், 1,000 விண்ணப்பதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். விண்ணப்பிக்கும் பொதுமக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 8, 2025
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த ஏர் அரேபியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடமைகளுடன் வந்த பயணி ஒருவர் கண்ணாடியை உடைத்து, தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அவ்வாறு தப்பிச்செல்ல முயன்ற வரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடைமைகளை CISF உதவியுடன் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
News December 8, 2025
கோவை: வாக்காளர்களே! SIR UPDATE

கோவை மக்களே, தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 8, 2025
கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் டிச.13ம் தேதி அன்று GN மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. பங்கேற்பு இலவசம் ஆகும். மேலும் விபரங்களுக்கு 8056358107. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


