News September 3, 2025

ஓணம் பண்டிகை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 5-ம் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து 7-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Similar News

News September 3, 2025

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என CM நம்பிக்கை

image

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஐரோப்பிய பயணம் துணை நிற்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். 26 நிறுவனங்களுடன் ₹15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் X தள பதிவில் பகிர்ந்துள்ளார்.

News September 3, 2025

அன்புமணிக்கு ‘டெட்லைன்’ குறித்த ராமதாஸ்

image

ராமதாஸ் தரப்பு முன்வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கு தற்போதுவரை அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால், இன்று அவர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பதிலளிக்க மேலும் ஒரு வாரம் ( செப்.10 வரை) அவகாசம் அளித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த காலக்கெடுக்குள் உரிய பதில் அளிக்கவில்லை என்றால், கட்சியில் அவர் இருந்து நீக்கப்படுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News September 3, 2025

மதிய உணவு சாப்பிட்டாச்சா… இதை பாருங்க!

image

மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் ‘Power Nap’ எனப்படும் குட்டித்தூக்கம் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது University college london நடத்திய ஆய்வுமுடிவு. இது ஞாபகசக்தியை மேம்படுத்தி, வேலையில் விழிப்புணர்வுடன் இருக்கவும் உதவுகிறதாம். இந்த குட்டித் தூக்கத்தால், இரவுத் தூக்கம் பாதிக்காதாம். ஆனால், இந்த Power Nap, 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இப்பவே, ஆபீஸ் டேபிளில் சாயத் தோணுதா?

error: Content is protected !!