News September 3, 2025
SBI வாடிக்கையாளர்களுக்கு வந்தது எச்சரிக்கை

SBI வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Whatsapp-ல் உங்களின் YONO கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக போலியான APP லிங்கை அனுப்புகின்றனர். அதனை கிளிக் செய்தால் பணம் திருடப்படுகிறது. எனவே, SBI வங்கி வாடிக்கையாளர்கள், internet மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
காவல் நிலைய மரணங்கள்.. SC எடுத்த முடிவு

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் CCTV பொறுத்தப்படாததை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 11 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியதாக வெளியான அறிக்கையின்படி சுப்ரீம் கோர்ட் இந்த முடிவை எடுத்திருக்கிறது. 2020-ல் ஒரு வழக்கின் விசாரணையில் சுப்ரீம் கோர்ட் எல்லா காவல் நிலையங்களில் CCTV பொறுத்த உத்தரவிட்டது. எனினும் பல காவல் நிலையங்களில் இது நடைமுறையில் இல்லை.
News September 5, 2025
இளையராஜாவின் காப்பிரைட் விவகாரம்.. மிஷ்கின் கேள்வி

இளையராஜா தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பது குறித்து மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பாடல்கள் தாய் பால் மாதிரி எனவும், இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் புதிதாக பாடல்களை போடாமல், இளையாராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இசை மேல் இருக்கும் மரியாதைக்காவது இசைஞானியிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 5, 2025
ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்த PM

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயெனுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும், அந்த 2 ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு வருமாறு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார்.