News September 3, 2025
கோவை மக்களுக்கு எச்சரிக்கை.!

கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 3பேர் இறந்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு தொண்டை வலிகாய்ச்சல் அதிகரித்துள்ளதால் தங்களது குழந்தைகளுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் இருக்குமோ என பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெண்ணீர் பருகவேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என கோவை மருத்துவர்கள் எச்சரிக்கை. SHAREit
Similar News
News September 7, 2025
கோவை: இந்த மெமு ரயில் மட்டும் ரத்து!

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போத்தனூரில் இருந்து இன்று (செப்.7) காலை 9.40 மணிக்கு புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 7, 2025
கோவை TNAU-வில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில், ஒருநாள் காளான் வளர்ப்பு பயிற்சி, (08.09.2025) அன்று நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.590 ஆகும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
மகளிருக்கான இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரிதம் பெண்கள் சமூக பணி மையம் இணைந்து பெண்களுக்கான இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு, அன்னை தெரசா தையல் பள்ளி, ரோசரி பள்ளி வளாகம், மேட்டுப்பாளையம், தொடர்புக்கு: 99761 – 80670, 77388 – 50094 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.