News September 3, 2025

புதுவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் சாவு

image

புதுவை பூமியான்பேட், புது தெரு சதீஷ், தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷின் தந்தை கடந்த 30ம் தேதி இறந்தார். அதிலிருந்து மனமுடைந்த நிலையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 8, 2025

புதுவை: காதலி இறந்த சோகத்தில் தற்கொலை

image

புதுவை தவளக்குப்பம் அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் ஜெயகாந்த், டிரைவர். இவர் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அப்பெண் குடும்ப பிரச்சனையில் இறந்தார். இதையடுத்து அதிலிருந்து, ஜெயகாந்த் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களிடமும் நண்பர்களிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News December 8, 2025

புதுச்சேரி: பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

image

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்வில், முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா, பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து, வரவேற்றனர்.

News December 8, 2025

புதுவை: கல்லூரி மாணவி தற்கொலை

image

வில்லியனுார் அருகே கனுவாப்பேடையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் ரூபிகா(19) B.Sc., படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலையும் செய்துள்ளார். இவர் வேலைக்கு சென்று இரவு நேரம் கடந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரூபிகா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!