News September 3, 2025
TNPSC குரூப் 4: ஜனாதிபதிக்கு தேர்வர்கள் கடிதம்

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, முனைவர் பட்ட அளவிலான கேள்விகளை உள்ளடக்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சீலிடப்படாத கேள்வித்தாள்கள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுதேர்வு நடத்த வேண்டும், குளறுபடிகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி, PM, கவர்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
Similar News
News September 5, 2025
சாம்பியன்களுக்கு வந்த சோதனை.. அடி மேல் அடி

2019 உலக கோப்பை சாம்பியன்களான இங்கிலாந்து தொடர் தோல்விகளால் நெருக்கடியில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இங்கிலாந்து 22 ODI போட்டிகளில் விளையாடி 7-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 6 ODI தொடர்களில் 5 தொடர்களை இழந்திருக்கிறது. ஐசிசி தரவரிசையில் 8வது இடத்திற்கு சறுக்கியதால், 2027 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழக்கலாம். BazBall அணுகுமுறையை இங்கிலாந்து கைவிடணுமா?
News September 5, 2025
Parenting: பெற்றோர்களே இந்த தவறுகளை செய்கிறீர்களா?

குழந்தைகளை வளர்ப்பதில் சில தவறுகளை செய்வதால் அவர்கள் பார்வையில் பெற்றோர் வில்லனாக மாறிவிடுகிறார்கள். இதனை தடுக்க, பெற்றோர் சில விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது. ➤ஒரு பிள்ளைக்கு மட்டும் அதிகம் செல்லம் கொடுக்காதீர்கள் ➤எதிர்த்து பேசும் குழந்தைகளை அடக்க வேண்டாம் ➤அவர்கள் செய்யும் தவறுகளை தண்டோரா போடாதீர்கள் ➤13 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். SHARE.
News September 5, 2025
பஞ்சாப் CM ஹாஸ்பிடலில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக பஞ்சாப் CM பகவந்த் மான் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாள்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவரது வீட்டில் வைத்து டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர். இதனால், வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பார்வையிட அரவிந்த் கெஜ்ரிவால் வந்த போது கூட அவரால் உடன் செல்ல இயலவில்லை. இந்நிலையில், இன்று உடல்நிலை மிகவும் மோசமானதால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.