News September 3, 2025
நீதிமன்றங்களில் AI பயன்பாடு?

பள்ளி மாணவர்களும் AI கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் உலகில் தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நீதித்துறையிலும் AI நுழைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட, அமர்வு நீதிமன்றங்களில் வரும் சிறிய வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக AI பயன்பாட்டை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக வழக்குகளை கையாள முடியும். உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 4, 2025
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புடின்

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு வந்தால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் தெரிவித்துள்ளார். இருள் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதாக நினைப்பதாகவும், உக்ரைன் விவகாரத்தில் அமைதி எட்டப்படாவிட்டால், அதை ராணுவ ரீதியாக தீர்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுவரை ஜெலன்ஸ்கி உடனான நேரடி சந்திப்பை புடின் புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News September 4, 2025
டிராக்டர், டயர்களுக்கு இனி வரி 5% மட்டுமே

விவசாயத் துறையிலும் பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. டிராக்டர் டயர்கள் & பாகங்கள், டிராக்டர்கள், குறிப்பான உயிர் உரங்கள், நுண்சத்துகள், சொட்டுநீர் அமைப்பு & தெளிப்பான்கள், மண்ணை பதப்படுத்தும் வேளாண் & தோட்ட உபகரணங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
போராடி தோல்வியை தவிர்த்த இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர் 4 சுற்றில் தென் கொரியாவிடம் இந்தியா போராடி தோல்வியை தவிர்த்தது. பிஹாரில் நடந்த போட்டியில் ஹர்திக் சிங் 8வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அதன் பிறகு தென் கொரியா இரண்டு கோல் அடித்து இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. பல வாய்ப்புகளை தவற விட்ட இந்தியா ஒரு வழியாக 52வது நிமிடத்தில் கோல் அடிக்க போட்டி 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. இந்தியா நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.