News September 3, 2025
திருச்செந்தூர் கோயிலில் பூஜையில் முக்கிய மாற்றம்

சந்திர கிரகணம் செப். 7ஆம் தேதி நிகழவுள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை, பிற்பகல் 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் தொடர்ந்து பள்ளியறை பூஜைகள் முடிந்து மாலை 5 மணிக்கு கோயில் நடை திருக்காப்பிடப்படும். பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
Similar News
News September 4, 2025
தூத்துக்குடி துறைமுக பார்வைக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி துறைமுகத்தை ஒவ்வொரு வருடமும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளன்று (செப். 5) பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஆனால், 2025ம் ஆண்டு, செப்டம்பர் 5 அன்று இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ஆண்டு துறைமுகத்திற்கு செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்கள் அல்லது நேரடி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News September 4, 2025
தூத்துக்குடி: ஆதார் கார்டில் திருத்தமா? இதை பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ <
▶️ அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News September 4, 2025
தூத்துக்குடியில் 11 ஆசிரியர்களுக்கு விருது

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விருது பெற உள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.