News September 3, 2025
இரவு ரோந்து பணியில் போலீஸ் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
கிருஷ்ணகிரி: கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது

ஓசூர் அருகே அதிமுக பிரமுகர் ஹரீஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் விசாரணையில், ஹரீஷ் தனது கள்ளக்காதலி மஞ்சுளாவிடம் இருந்து ரூ.80 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், மஞ்சுளாவின் மற்றொரு ஆண் நண்பர் மோனிஷ் உடன் பழகக்கூடாது எனத் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்த மஞ்சுளா கூலிப்படை ஏவிக் கொலை செய்தது தெரியவந்தது. மஞ்சுளா, மோனிஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் பின்பக்க தலையில் அடிபட்டு பலி!

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாதநபர் ஒருவர் கிருஷ்ணகிரியிலருந்து ஓசூரை நோக்கி பேரண்டபள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று (டிச.6) மாலை வரும் பொழுது. பின்னால் வந்த அடையாளம் தெரியாத வண்டி இடித்துச் சென்றதில் கீழேவிழுந்து பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் போலீசார் இறந்த நபர் மற்றும் அவரை இடித்துச் சென்ற வாகனம் யார் என்று விசாரித்து வருகின்றனர்.


