News September 2, 2025

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., ஆகியோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Similar News

News September 3, 2025

JUST NOW: தி.மலை பேருந்தில் டிக்கெட்கள் திருட்டு

image

சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.மலை நோக்கி வந்த அரசுப்பேருந்தில் நடத்துனரின் பை திருடப்பட்டுள்ளது. அதில் இருந்த ரூ.2.44 லட்சம் மதிப்புள்ள அரசுப்பேருந்து டிக்கெட்டுளும் காணாமல் போன நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேருந்து நிலையத்தின் மேலாளர், நடத்துனர் ஆகியோர் மாதவரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

News September 3, 2025

தி.மலை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

தி.மலை: நாய் குறுக்கே வந்து சிறுமி பலி

image

தி.மலை ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி தமிழ்செல்வி, மகள் அனாமிகா மூவரும் நேற்று சேத்துப்பட்டு அருகே பைக்கில் சென்ற போது, 10க்கும் மேற்பட்ட நாய்கள் சண்டையிட்டு கொண்டு பைக் மீது பாய்ந்ததில் மூவரும் கீழே விழுந்தனர். இதில் சிறுமி அனாமிகா பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தெருநாய்கள் பிரச்சனை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!