News September 2, 2025
இரவு 11 மணி முதல்… இதை செய்யாதீங்க

இரவுத் தூக்கத்தை தவிர்ப்பது, பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகும். குறிப்பாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சேதமடைந்த திசுக்களை இரவில் தான் உடல் பழுதுபார்த்து சரி செய்கிறது. ஆகவே, இரவில் தூங்குவது அவசியம். குறிப்பாக, உள்ளுறுப்புகள் தங்கள் பழுதுகள், கழிவுகள் நீக்கும் பணிகளை மேற்கொள்ளும் இரவு 11 முதல் அதிகாலை 4 மணிவரை விழித்திருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
Similar News
News September 3, 2025
அன்புமணிக்கு ‘டெட்லைன்’ குறித்த ராமதாஸ்

ராமதாஸ் தரப்பு முன்வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கு தற்போதுவரை அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால், இன்று அவர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பதிலளிக்க மேலும் ஒரு வாரம் ( செப்.10 வரை) அவகாசம் அளித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த காலக்கெடுக்குள் உரிய பதில் அளிக்கவில்லை என்றால், கட்சியில் அவர் இருந்து நீக்கப்படுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 3, 2025
மதிய உணவு சாப்பிட்டாச்சா… இதை பாருங்க!

மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் ‘Power Nap’ எனப்படும் குட்டித்தூக்கம் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது University college london நடத்திய ஆய்வுமுடிவு. இது ஞாபகசக்தியை மேம்படுத்தி, வேலையில் விழிப்புணர்வுடன் இருக்கவும் உதவுகிறதாம். இந்த குட்டித் தூக்கத்தால், இரவுத் தூக்கம் பாதிக்காதாம். ஆனால், இந்த Power Nap, 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இப்பவே, ஆபீஸ் டேபிளில் சாயத் தோணுதா?
News September 3, 2025
EPSக்கு எதிராக அதிருப்தி குரல்கள்

EPS உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், பவானி MLA பண்ணாரி, தம்பி சுப்பிரமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சென்றனர். கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்த முன்னாள் MP சத்தியபாமாவும், செங்கோட்டையனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். EPS மீது அதிருப்தியில் இருக்கும் வேறு சிலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.