News September 2, 2025

சீட் பெல்ட் விழிப்புணர்வு: SP அலுவலகம் புது முயற்சி.

image

திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சமூக வலைத்தளங்கள் மூலம் சீட் பெல்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கார் பயணங்களின்போது சீட் பெல்ட் அணிவது உயிரைக் காப்பதற்கான முதல் படி என வலியுறுத்தும் வகையில், ‘சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாகப் பயணம் செய்து தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்’ என்ற வாசகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News

News March 8, 2026

திருப்பத்தூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

திருப்பத்தூர்: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

image

திருப்பத்தூர் மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 8, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!