News September 2, 2025

செங்கல்பட்டு: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

image

செங்கல்பட்டு இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.21க்குள் விண்ணப்பிக்கலாம்.ஷேர்

Similar News

News September 3, 2025

குடியரசு தலைவரை வரவேற்ற துணை முதல்வர்

image

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் த.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர். அரசின் சார்பில் அவருக்குப் புத்தகம் வழங்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News September 3, 2025

தாவரவியல் பூங்காவினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் 137 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் தாவரவியல் பூங்காவை மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு செய்தார். நகர் மன்றத் தலைவர் சண்முகம், நகராட்சி மண்டல இயக்குநர் லட்சுமி, நகராட்சி ஆணையர் ரமேஷ், மற்றும் வட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

News September 2, 2025

நாய்கள் கருத்தடை மையத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்.

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில், இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையத்தினை, இன்று(செப்.2) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சண்முகம், வட்டாட்சியர் ஆறுமுகம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!