News September 2, 2025

சிவகாசியில் ஜல் ஜீவன் திட்டத்தில் நூதன மோசடி?

image

சிவகாசி அருகே வெள்ளூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் இணைக்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் இங்கு 4 முதல் 5 வீடுகளுக்கு ஒரே பகுதியில் குடிநீர் குழாயை இணைத்து நூதன மோசடியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு புகாரும் அளித்துள்ளனர்.

Similar News

News September 3, 2025

மாட்டுப் பண்ணையில் புகுந்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு

image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கம்பிக்குடி கிராமத்தில் ராக்கு
க/பெ. கோபாலன் என்பவரது மாட்டுப் பண்ணையில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து அதை பத்திரமாக மீட்டு பின் காட்டுப் பகுதியில் கொண்டு போய் உயிருடன் விட்டனர்.

News September 2, 2025

தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்

image

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

News September 2, 2025

ஶ்ரீவில்லிபுத்தூரில் குப்பை கிடங்கில் தீ

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பையை முழுமையாக தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் கரும் புகை சூழ்ந்து சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!