News September 2, 2025
கோவை மக்களே சுற்றுலா விருதுக்கு விண்ணப்பியுங்க!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 29 அன்று, சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, தமிழக அரசு சார்பில் 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள், www.tntourisamwords.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News September 3, 2025
கோவை மக்களுக்கு எச்சரிக்கை.!

கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 3பேர் இறந்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு தொண்டை வலிகாய்ச்சல் அதிகரித்துள்ளதால் தங்களது குழந்தைகளுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் இருக்குமோ என பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெண்ணீர் பருகவேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என கோவை மருத்துவர்கள் எச்சரிக்கை. SHAREit
News September 3, 2025
கோவையில் 2,000 பேருக்கு இலவச பட்டா: ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில், இலவச பட்டா கோரி விண்ணப்பித்த 2,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும், 1,000 விண்ணப்பதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். விண்ணப்பிக்கும் பொதுமக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News September 2, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (02.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.