News September 2, 2025
வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சௌபின்

மலையாளத்தில் கலக்கி வந்த நடிகர் சௌபின் சாஹிர், ’கூலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். ’மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தை தயாரித்ததில் மோசடி செய்ததாக சமீபத்தில் அவர் கைதாகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் அவர் வெளிநாட்டுக்கு செல்ல தடை உள்ளது. இந்நிலையில் துபாயில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
Similar News
News September 2, 2025
படுக்கைக்கு முன் தம்பதிகள் செய்ய வேண்டியவை ❤️

❤️முடிந்தவரை இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் ❤️பார்ட்னருக்கு உணவை பரிமாறுங்கள். ❤️சாப்பிடும்போது பார்ட்னரின் சமையலை பாராட்டுங்கள் ❤️எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாடுங்கள் ❤️ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள் ❤️சாப்பிட்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு வாக் செல்லுங்கள் ❤️நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டுங்கள் ❤️ஒரு நாளைக்கு 5 முறையேனும் ஐ லவ் யூ சொல்லுங்கள். உங்க ஐடியாவையும் கமென்ட் பண்ணுங்க.
News September 2, 2025
பாக்.,-ஐ ஆதரித்ததால் இந்தியா பழிவாங்குகிறது: அஜர்பைஜான்

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக, இந்தியா உலக அரங்கில் தங்களை பழிவாங்குவாதாக அஜர்பைஜான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக விரும்பிய தங்களது விண்ணப்பத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சாடியுள்ளது. இதுபோன்று இந்தியா எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும், பாகிஸ்தான் உடனான தங்களது நட்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
News September 2, 2025
முதல்வரின் வெளிநாடு பயணம் ஒரு மோசடி: அன்புமணி

CM ஸ்டாலினின் வெளிநாடு பயணம் ஒரு மோசடிப் பயணம் என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், ₹1000 கோடி முதலீடு செய்யவுள்ள Nordex நிறுவனம் சென்னைக்கு அருகிலும், ₹201 கோடி முதலீடு செய்யவுள்ள ebm-papst தரமணியிலும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் செய்திருக்க வேண்டிய ஒப்பந்தங்களுக்காக CM ஜெர்மனி சென்றது முற்றிலும் வீணானது என்று அவர் சாடியுள்ளார்.