News September 2, 2025
விருதுநகர்: வங்கியில் வேலை அறிவிப்பு

கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News September 3, 2025
மாட்டுப் பண்ணையில் புகுந்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கம்பிக்குடி கிராமத்தில் ராக்கு
க/பெ. கோபாலன் என்பவரது மாட்டுப் பண்ணையில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து அதை பத்திரமாக மீட்டு பின் காட்டுப் பகுதியில் கொண்டு போய் உயிருடன் விட்டனர்.
News September 2, 2025
தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
News September 2, 2025
ஶ்ரீவில்லிபுத்தூரில் குப்பை கிடங்கில் தீ

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பையை முழுமையாக தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் கரும் புகை சூழ்ந்து சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.