News April 10, 2024
ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை

பாஜக மறுமுறை ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டமே இருக்காது என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறிய அவர், பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் திட்டத்தால் சுத்தமாகி விட்டனர். பாஜக அரசால் மக்கள் அவதியில் உள்ளதாகவும் விமர்சித்தார்.
Similar News
News April 24, 2025
எப்படி இருக்கிறது கேங்கர்ஸ்? Review & Rating!

மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாறுவேஷத்தில் வரும் சுந்தர்.சி, என்ன செய்கிறார் என்பதே கதை. ப்ளஸ்: வடிவேலுவின் காமெடிதான் மேஜர் ப்ளஸ் பாய்ண்ட். இயக்குநர், நடிகர் என முத்திரை பதித்துள்ளார் சுந்தர்.சி. தனக்கே உரித்தான பாணியில் பக்கா கமர்சியல் படத்தை கொடுத்து அசத்தியுள்ளார். ஒளிப்பதிவு, பாடல்கள் படத்திற்கு பக்கபலம். பல்ப்ஸ்: லாஜிக் மீறல், கொஞ்சம் போரான பிளாஷ்பேக். Rating: 2.5/5
News April 24, 2025
ரேஷன் கடைகளில் காலியிடம் நிரப்பப்படும்: அமைச்சர்

ரேஷன் கடைகளில் கட்டுநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கிராமங்களில் 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து பொருள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
News April 24, 2025
தந்தையால் மகள் பாலியல் வன்கொடுமை: மறைத்த தாய்

மகளை தந்தை, உறவினர்கள் ரேப் செய்ததை மறைத்த தாய் மீது பதிவான போக்சோ வழக்கை டெல்லி HC ரத்து செய்தது. 10 வயது சிறுமி, பலமுறை 2023-ல் ரேப் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசிடம் முன்கூட்டி தகவல் தெரிவிக்காததை சுட்டிக்காட்டி, விசாரணை நீதிமன்றத்தால் தாய் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வழக்கை HC ரத்து செய்தது.