News September 2, 2025

திருவள்ளூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக் <<>>செய்து இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News September 2, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (2/09/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 2, 2025

வடமாநில தொழிலாளர்கள் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்

image

காட்டுப்பள்ளியில், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் என்பவரின் மரணம் தொடர்பாக, வடமாநில தொழிலாளர்கள் இன்று (செப்.2) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் மீது கல்வீசித் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.5 லட்சம் நிவாரணமும், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

News September 2, 2025

திருவள்ளூர் மக்களே! அவசர உதவிக்கு அழையுங்கள்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே! அவசர காலங்களில் உதவக்கூடிய முக்கியமான எண்கள்
▶️ மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 044– 27666746
▶️ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 18005997626
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️ முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️ முதியோர் உதவி எண் – 1800-180-1253
SHARE பண்ணுங்க!

error: Content is protected !!