News September 2, 2025
தென்காசியில் அரசு வேலை APPLY NOW!

ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேல நீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணியிடங்களை இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது செப்டம்பர் 1ம் தேதி 31 வரை விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 3, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.2) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) மேளா சேர்க்கை முகாம் (செப்.08) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஒராண்டு தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் பழகுநர் பயிற்சி மேளா முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
News September 2, 2025
நெல்லை ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுரை

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் உற்பத்தியின் போது பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதன் நச்சுப்பொருட்கள் பயிர்களின் இலைகள் மற்றும் காய்களில் தங்கி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வேண்டுகோள்.