News April 10, 2024
ஹேமமாலினி குறித்து அவதூறு; காங்., பிரமுகருக்கு நோட்டீஸ்

ஹேமமாலினி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்., தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான பேச்சுகளில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக. இது குறித்து பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, “நான் பேசியதை வெட்டி ஒட்டியுள்ளார்கள், அவதூறாக எதையும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
Similar News
News April 26, 2025
ராசி பலன்கள் (26.04.2025)

➤மேஷம் – வரவு ➤ரிஷபம் – கவலை ➤மிதுனம் – பயம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – களிப்பு ➤கன்னி – தாமதம் ➤துலாம் – சுகம் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – சிக்கல் ➤மகரம் – லாபம் ➤கும்பம் – நன்மை ➤மீனம் – சோதனை.
News April 26, 2025
நினைவுகளின் விசித்திர அனுபவம்

நினைவுகள் எப்போதும் சிறப்பானவை தான். கடந்த காலத்தில் நாம் அழுத கணங்களை நினைவுகூர்ந்து, அட இதற்கா நாம் அவ்வளவு கவலைப்பட்டோம் என்று சில சமயங்களில் நாம் சிரிக்கிறோம். அதேநேரம் நாம் சிரித்து மகிழ்ந்த காலங்களை நினைத்து, மீண்டும் அந்த காலம் வாராதா என்று ஏங்கி அழவும் செய்கிறோம். இது தானே வாழ்க்கை!
News April 26, 2025
80 வயது மூதாட்டி ரேப், கொலை.. இளைஞர் கைது

சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த நாகராஜ் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறையில் தவறி விழுந்த அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.