News September 2, 2025
திருப்பத்தூர்: 2 இளைஞர்கள் தற்கொலை

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பரிதி (22). சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதே போல் புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(22). சென்னை தனியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவியாளருக்கு படித்து வந்துள்ளார். ஒரு நிகழ்ச்சிக்காக வந்த இவரும் தற்கொலை செய்து கொண்டார். இதைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 2, 2025
சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.02) சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்
News September 2, 2025
திருப்பத்தூரில் நாளை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 3ம் தேதி புதன்கிழமை ஜோலார்பேட்டை நகராட்சி, திருப்பத்தூர், கந்திலி, நாட்டறம்பள்ளி, கைலாசகிரி, உள்ளிட்ட 6 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மக்களின் குறைகளை நேரிடையாக கேட்டறிந்து 45 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வழங்கலாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News September 2, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று செப்டம்பர் 02)இரவு) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.