News April 10, 2024
கொடுங்கோல் ஆட்சியை நோக்கி நகர்கிறோம்

கொடுங்கோல் ஆட்சியை நோக்கி இந்தியா நகர்வதாக வயநாடு தொகுதி சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இதை ஏற்க மறுக்கிறது. இல்லை என்றால் ராகுல் இங்கு போட்டியிட வேண்டிய தேவை இருக்காது எனக் கூறினார். மேலும், தேசத்தில் பாசிசம் உச்சத்தை எட்டியுள்ளதால், அதனை அனைவரும் ஒன்றினைந்து முறியடிக்க வேண்டும் என்றார். ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆனி ராஜா, சிபிஎம் மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.
Similar News
News April 29, 2025
வெளி மாநிலத்தவர்களுக்கு தனி ID கார்டு: அமைச்சர்

தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வேல்முருகன் MLA கோரிக்கை விடுத்தார். அதற்கு, ID கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
News April 29, 2025
கனடாவுக்கு ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் டிரம்ப்

கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு பல ஆஃபர்களை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாறினால், மக்களின் வரிச் சுமை வெகுவாக குறையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உங்கள் வரிகளை பாதியாக குறைக்க போகும் நபரை தேர்ந்தெடுங்கள் என தெரிவித்துள்ள அவர் US-யுடன் இணைந்தால் மக்களுக்கு பல இலவசங்கள் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
News April 29, 2025
காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT