News April 10, 2024
வரலாற்றில் இன்று

➤1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார்.
➤1912 – டைட்டானிக் கப்பல் தனது கடைசி பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறைமுகத்தில் ஆரம்பித்தது.
➤1985 – யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
➤ 2006 – மீரட் நகரில் வணிகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் உயிரிழந்தனர்.
➤ 2016 – கொல்லம் கோவில் விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி
Similar News
News April 29, 2025
கனடாவுக்கு ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் டிரம்ப்

கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு பல ஆஃபர்களை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாறினால், மக்களின் வரிச் சுமை வெகுவாக குறையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உங்கள் வரிகளை பாதியாக குறைக்க போகும் நபரை தேர்ந்தெடுங்கள் என தெரிவித்துள்ள அவர் US-யுடன் இணைந்தால் மக்களுக்கு பல இலவசங்கள் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
News April 29, 2025
காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
News April 29, 2025
தங்க பத்திர திட்ட முதலீடு: RBI புதிய அறிவிப்பு!

2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.