News September 2, 2025

செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள்

image

இலங்கை உள்நாட்டு போரின்போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எலும்புக்கூடுகள் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜூன் முதல் ஆக.1 வரை 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மணி சிந்துப்பாத்தி புதைகுழியில் நடைபெற்ற 3 கட்ட அகழாய்வில் இவை வெளிவந்துள்ளன. இதில் சிறுவர்கள், பெண்களே அதிகம் என்பது சோகத்தின் உச்சம்.

Similar News

News September 2, 2025

செமிகண்டக்டர் டிஜிட்டல் டைமண்ட்: PM மோடி

image

செமிகண்டக்டர் துறையில் இந்திய உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக, PM மோடி <<17589714>>செமிகான் இந்தியா<<>> மாநாட்டில் தெரிவித்துள்ளார். வணிக சந்தையில் எண்ணெய் ’கருப்பு தங்கம்’ என்றால், செமிகண்டக்டர் (Chips) ‘டிஜிட்டல் டைமண்ட்’ என மோடி வர்ணித்துள்ளார். முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்த அவர், விரைவில் ‘மேட் இன் இந்தியா’ பொருட்கள் உலக சந்தையை அலங்கரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

BREAKING: செங்கோட்டையன் விலகல்? EPS பதில்

image

EPS மீது அதிருப்தியில் இருக்கும் <<17589254>>மூத்த தலைவர் செங்கோட்டையன்<<>>, 5-ம் தேதி மனம் திறந்து பேசவுள்ளதாக இன்று காலையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசியலில் பரபரப்பு தொற்றியது; குறிப்பாக அவர் அதிமுகவில் இருந்து விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், செங்கோட்டையன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்று மாலை பதிலளிப்பதாக EPS தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

SCO மாநாடு ஒரு நாடகம்: புலம்பும் டிரம்பின் அசிஸ்டன்ட்

image

SCO மாநாட்டில் மோடி- புடின்- ஜீ ஜின்பிங் சந்திப்பு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதை பார்த்து டிரம்ப்பும் அவரது அமைச்சர்களும் விமர்சனங்களை வீசுகின்றனர். அந்த வரிசையில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெசண்ட், SCO மாநாடு ஒரு நாடகம் என்றும், இந்தியாவும், சீனாவும் அதில் மோசமான நடிகர்கள் எனவும் சாடினார். ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைன் போரை தூண்டுவதற்கு சமம் என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!