News September 2, 2025
ஆப்கனுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், 15 டன் உணவுப் பொருள்கள், 1,000 டெண்ட்டுகளை இந்தியா நிவாரண உதவியாக ஆப்கனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் தேவையான உதவிகள் அளிக்க தயார் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 2, 2025
CINEMA ROUNDUP: சின்னத்திரையில் பார்த்திபன்!

*சின்னத்திரையில் ‘பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் பார்த்திபன்.
*மாலை 7 மணிக்கு குமரன் நடித்துள்ள ‘குமார சம்பவம்’ பட ட்ரெய்லர் வெளியாகிறது.
*’மார்கன்’ படத்தில் நடித்து அஜய் திஷன் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘பூக்கி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
*Wednesday சீசன் 2 கடைசி 4 எபிசோடுகள் நாளை நெட்பிளிக்ஸ் OTT-யில் வெளியாகிறது.
News September 2, 2025
தீபாவளி பரிசு… சம்பளம் உயர்கிறது

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். இதன் அடிப்படையில், தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 55%-லிருந்து 58%ஆக 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தமிழக அரசும் அகவிலைப்படியை 3% உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 2, 2025
ஆட்சியில் நிதி பற்றாக்குறை குறைந்திருக்கிறது: அமைச்சர்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சிவசங்கர் விளக்கமளித்தனர். மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத போதும் திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவித்தவர்கள், திமுக ஆட்சி அமைந்த பிறகு, 4.91 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 3%-ஆக குறைந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.