News September 2, 2025
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி அறிவிப்பு

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் செப்.9, 10ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2,000 வழங்கப்படும். போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
அரியலூர்: ரூ.35,000 சம்பளம்-கிராம வங்கியில் வேலை!

தேசிய அளவில் வங்கிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கு 21.09.2025 தேதிக்குள் <
News September 2, 2025
அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

குறுஞ்செய்தி, சமூக வலைதளம், மின்னஞ்சல் மூலம் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அரியலூர் மாவட்ட காவல்துறையினர் “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்று எச்சரித்துள்ளனர். மேலும், சிறிய முதலீடுகளின் மூலம் அல்லது சில வணிக வாய்ப்புகளின் மூலம் அதிக வருமானத்தை பெறலாம் என்று கூறும் எந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT NOW…
News September 1, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி (செப்.1) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!