News September 2, 2025
தென்காசி இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்டம், காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 2, 2025
கல்குவாரிகளின் அளவீடு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் கல் குவாரிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி, புளியறை ஜமீன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 45 குவாரிகளில் 17 குவாரிகள் அளவீடு செய்யப்பட்டன. நீதிபதிகள், 17 குவாரிகளின் அறிக்கையை செப்.9க்குள் தாக்கல் செய்யவும், மீதமுள்ளவற்றை 4 வாரங்களுக்குள் அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
News September 2, 2025
செங்கோட்டை ரயில் மாற்று பாதையில் இயக்கம்

செங்கோட்டை – மயிலாடுதுறை பயணிகள் ரயில் வண்டி எண்(16848) செப்டம்பர் மாதம் முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் செல்லவுள்ளது. புதன்கிழமை மட்டும் மதுரை வழியாகவும், மற்ற நாட்களில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் , திருச்சி வழியாக செல்லும். இதை மற்றவர்களுக்கு *ஷேர் செய்யவும்.
News September 2, 2025
தென்காசி கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா??

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு தென்காசி மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்க <