News April 9, 2024
திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் ஐ.டி. சோதனை

விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அவர், அந்தத் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அதற்காக, தண்டேஸ்வரநல்லூரில் உள்ள நிர்வாகி ஒருவர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அவர் தங்கியிருந்த நிலையில், அங்கு ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றனர்.
Similar News
News April 24, 2025
PoK-வில் 42 தீவிரவாத முகாம்கள்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, மேலிட உத்தரவுக்காக 130 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். மேலும், Hizbul Mujahideen தீவிரவாதிகள் 60 பேரும், Jaish-e-Mohammed மற்றும் Lashkar-e-Taiba தீவிரவாதிகள் 17 பேரும், தற்போது காஷ்மீரில் ஆக்டிவாக உள்ளதாகவும் உளவுத் தகவல் வந்துள்ளது.
News April 24, 2025
AK சென்னை வர காரணம் இதுவா?

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை முடித்து கொடுத்துவிட்டு ரேஸ் களத்திற்குச் சென்று அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் அஜித்குமார், திடீரென சென்னை திரும்பியுள்ளார். காரணம், இன்று அஜித்குமார் – ஷாலினி தம்பதிக்கு 25-வது திருமண நாளாம். அமர்க்களம் படத்தின்போது உருவான காதல் பயணம் 2000-ம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..
News April 24, 2025
யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு கம்பராமாயணம் பரிசு

யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, கிண்டி ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கேடர்களுக்கு சால்வை அணிவித்த அவர், கம்பராமாயணம் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும், புத்தகம் வாசித்துக்கொண்டே பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.