News September 1, 2025

காஞ்சியில் ஐஸ்வர்யத்தை அள்ளித்தரும் கள்வப்பெருமாள்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூர் பகுதியில் கள்வப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் கள்வப்பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு தயிர்சாத நெய்வேத்தியம் படைத்து விஷேச பூஜைகள் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக் கஷ்டத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவுங்க!

Similar News

News September 2, 2025

காஞ்சிபுரம்: தமிழ் தெரிந்தால்.. வங்கியில் வேலை

image

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <>கிளிக்<<>> பண்ணுங்க

News September 2, 2025

காஞ்சிபுரத்தில் பயத்தில் மக்கள்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஷோபாவை நாய் ஒன்று கடித்துள்ளது. ஏற்கெனவே, அந்த நாய் இதுவரை 7 பேரை கடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தொடர்ந்து தெருநாய்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

News September 2, 2025

காஞ்சிபுரம் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளர் பாட்டில் வாங்கும் போது ரூ.10 கூடுதலாக செலுத்தி, மீண்டும் காலி பாட்டிலை ஒப்படைக்கும்போது ரூ.10 திரும்ப வழங்கப்படும் என திட்டம் அமலுக்கு வந்தது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் சங்க தலைவர் பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!