News September 1, 2025
புதுச்சேரி: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

புதுச்சேரியில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 0413-2227518 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT
Similar News
News September 2, 2025
புதுவை: காரைக்காலுக்கு புதிய சப்-கலெக்டர்

காரைக்கால் மாவட்ட புதிய சப்-கலெக்டராக பூஜா ஐ.ஏ.எஸ்.-யை புதுச்சேரி அரசு கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி நியமனம் செய்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று (செப்.01) காலை காரைக்கால் மாவட்ட சப்-கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து சப்-கலெக்டரை, காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் குலசேகரன், மாவட்ட தேர்தல் அலுவலக கண்காணிப்பாளர் பக்கிரிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 2, 2025
அரசு காலி பணியிட விபரங்களை சமர்பிக்க உத்தரவு

குரூப்-சி, பி, பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்ய புதுவை தேர்வு ஆணையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர், இன்று (செப்.01) தெரிவித்துள்ளார். மேலும், துறை தலைவர்கள், தங்கள் துறையின் காலியிடங்கள், பதவிகளின் பெயர் உட்பட அனைத்து விபரங்கள், முன்மொழிவுகளையும் வரும் 15ந் தேதிக்குள் தேர்வு ஆணையத்திடம் சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
News September 1, 2025
புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளம்.. ஜிப்மரில் வேலை!

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பதிவிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்.29ம் தேதிக்குள் <