News September 1, 2025
திருச்சி மக்களே.. தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளதா?

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க
Similar News
News September 4, 2025
திருச்சி: மின்வாரியத்தில் வேலை அறிவிப்பு

திருச்சி மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் <
News September 4, 2025
மணப்பாறை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை கோட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 23ஆம் தேதி நான்காம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
திருச்சி மாவட்ட சி.இ.ஓ முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அரசு, அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ப.ஆசிரியர்கள், இ.நி.ஆசிரியர்கள் சி.ஆசிரியர்கள் மொத்த எண்ணிக்கை டேட் Qualified, tobe Qualified & 01.09.2025 முதல் 31.08.2030 வரை ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரம் https://forms.gle/kh5scடுh9SDH24F36 என்ற லிங்கில் பதிவிட கூறியுள்ளார்.