News September 1, 2025
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறதா?

விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் ₹5 முதல் ₹20 வரை சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சரக்கு, வாடகை வாகனங்கள், பஸ் கட்டணங்கள் உயர்வதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 6, 2025
HEALTH: மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.
News September 6, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் 15 காசுகள் குறைந்து ₹88.27 ஆனது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவதால் கடந்த சில தினங்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏற்கெனவே USA-வின் புதிய வரியால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்கள் உள்பட பலருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News September 6, 2025
பாசம் மட்டுமே பாட்டிக்கு உரிமை கொடுத்துவிடாது: HC

பாட்டி, பேரன் இடையேயான பாசம் மட்டுமே குழந்தையை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது என மும்பை HC கூறியுள்ளது. பிறந்ததுமுதலே வளர்த்து வந்த தன் பேரனை பிரிய மனமின்றி கோர்ட் வரை சென்றிருக்கிறார் பாட்டி. சொத்து தகராறில், மகனை தன்னிடம் கொடுக்குமாறு தந்தை கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் (பாட்டி) மறுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், 2 வாரத்திற்குள் சிறுவனை தந்தையிடம் ஒப்படைக்க HC உத்தரவிட்டுள்ளது.