News September 1, 2025

மனோன்மணியம் பல்கலை இன்று முதல் செயல்படும்

image

அபிஷேக பட்டியில் உள்ள MSபல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29ம் தேதி மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. இந்த நிலையில் இன்று முதல் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கபட்டது.

Similar News

News September 4, 2025

நெல்லையில் வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின்கட்டணம்

image

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி உபமின் நிலையத்திற்குட்பட்ட மருதகுளம் பகுதியில் கூலித்தொழிலாளி மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார்.இவரது வீட்டிற்கு இந்த மாதம் ரூ.1,61,31,281 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து அவர் மின்வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மின்வாரியம் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இது இன்று சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

நெல்லை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

image

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

Grindr போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மோசடி செய்பவர்கள் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம், பொருட்களை வழிப்பறி செய்கின்றனர். பொதுமக்கள் இதில் எச்சரிக்கையாக இருக்கவும், இத்தகைய குற்றங்களில் பாதிக்கப்பட்டால் 1930 கட்டணமில்லா எண் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!