News April 9, 2024

டி20 உலகக் கோப்பை அணியில் ரிஷப் பந்த்?

image

கார் விபத்தில் படுகாயம் அடைந்து ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ரிஷப் பந்த், தற்போது ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லி அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துவரும் அவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், டி20 WCக்கான இந்திய அணியில் அவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக Cricbuzz தெரிவித்துள்ளது. அவர் அணிக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும் என கூறப்படுகிறது.

Similar News

News April 24, 2025

பஹல்காம் விவகாரத்தில் இந்தியாவின் அடுத்த பதிலடி!

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் J&K காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. உதம்பூர் பசந்த்கரில் இன்று காலை நடத்தப்பட்ட என்கவுன்டரில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

News April 24, 2025

‘மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ விண்ணப்பம் தொடங்கியது!

image

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் 2025-2026 கல்வியாண்டில் முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ₹354-ஐ ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். மேலும், யூனிவர்சிட்டியில் வழங்கப்படும் படிப்புகள், கட்டண விவரங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள <>இங்கே<<>> கிளிக் செய்யவும். வரும் ஜூலை 7-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

News April 24, 2025

BREAKING: சட்டப்பேரவைக்கு செல்லாத செந்தில் பாலாஜி!

image

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்(SC) 4 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவர் இன்று சட்டப்பேரவைக்கு செல்லவில்லை. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? எது வேண்டும் என்பது குறித்து 4 நாள்களில் முடிவெடுக்க SC கெடு விதித்திருந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!