News September 1, 2025
வேலூர் அருகே பைக் திருட்டு போலீசார் விசாரணை

வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஏடிஎம் மையம் முன்பு தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து சரவணன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 5, 2025
ஓணம் தின வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்பி

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று (செப்ட-05) உலகெங்கும் ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அன்பை விதைத்து வளமையை அறுவடை செய்து ஒன்றிணைந்து இத்திருஓணத்தை திருநாளை கொண்டாடிடுவோம். இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தனது சமூக வலைதள பதிவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
வேலூர் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம்

வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
வேலூர்: +2 முடித்தால் கிராம வங்கியில் வேலை!

வேலூர் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <