News September 1, 2025
நீலகிரி: விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

உதகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக அரங்கில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது . எனவே விவசாயிகள் தங்களுடைய விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை 5 தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் தபால் பெட்டி 72 , உதகை 643001 முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
நீலகிரியில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

நீலகிரி மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<
News September 4, 2025
நீலகிரி: சோலாடா பள்ளி தலைமை ஆசிரியைக்கு விருது

தமிழக கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, இந்த ஆண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பியூலா ரோஸ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இந்த உயரிய விருது, அவரது சிறப்பான கல்விச் சேவைக்காக வழங்கப்படுகிறது.
News September 4, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் குறித்த விவரங்களையும், அவசர உதவிக்கான தொடர்பு எண்களையும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களில், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம்பெற்றுள்ளன.