News September 1, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (செப். 2) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. அச்சாப்பாக்கம் வட்டாரத்தில், காட்டுக்கரணை கிராம ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடத்தில் முகாம் நடைபெறும். திருப்போரூர் வட்டாரத்தில், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கணேஷ் மகாலில் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 5, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் படகு போக்குவரத்து சேவை.

image

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் இருந்து, சென்னை நேப்பியர் பாலம் வரை படகு போக்குவரத்து தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இந்த சேவையை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான படகு நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News September 5, 2025

வாகன சோதனையில் ரூ.27.14 லட்சம் அபராதம்

image

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.27.14 லட்சம் விதிக்கப்பட்டது.

News September 5, 2025

செங்கல்பட்டு: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <<17620278>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>

error: Content is protected !!