News September 1, 2025
மயிலாடுதுறை: மின் தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் துணைமின் நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் நீடூர், மணலூர், அனந்தமங்கலம், கொற்கை, கொற்றவநல்லூர், நடராஜபுரம், மல்லியகொல்லை, வில்லியநல்லூர், மேலமாத்தூர், கடுவங்குடி, கொண்டல் கங்கனாம்புத்தூர், அருவாப்பாடி, மொழையூர் உள்ளிட்ட பகுதிகளில் (செப்டம்பர் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Similar News
News September 4, 2025
வேளாண் பொறியியல் பட்டய படிப்புக்கான அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டய படிப்புகளில் சேர பல்வேறு மாவட்ட வேளாண்மை கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன. வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டய படிப்புகளில் சேர ஆர்வமுள்ள 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் http://tnau.ucanapply.ac.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.12-ந் தேதி நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் காலை 9 மணி முதல் 3 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுபவர்கள் தங்களது சுய விவரங்களை <
News September 4, 2025
மயிலாடுதுறை: 113 மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் உதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் சுமார் 113 மாணவ மாணவிகளுக்கு மொத்தம் 4.72 கோடி மதிப்பிலான உயர்கல்வி கடன் வழங்கப்படுகிறது. முகாமில் பொறியியல் படிப்பு பயில 57 மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பிற்கு 17 பேருக்கும் அறிவியல் படிப்புக்கு 24 பேருக்கும் செவிலியர் படிப்புக்கு 11 பேருக்கும் இதர படிப்புகளுக்கு 4 மாணவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.