News September 1, 2025
சிறுகமணி: மண்புழு உரம் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்

திருச்சி, சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண் வளத்தை மேம்படுத்துவதற்கு மண்புழு உரம் மிகச்சிறந்ததாகும். மக்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம். மண்புழு உரம் வளர்க்கும் பைகள் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது. மேலும் விபரங்களுக்கு 0431-2962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
திருச்சி: போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

திருச்சி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
சமயபுரம் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு

திருச்சி, சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு 12.09.25ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்கிறது. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 14 வயது முதல் 24 வரை இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ரூ.10 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊக்க தொகை வழங்கப்படும். விபரங்களை https://samayapurammariamman.hrce.tn.gov.in/ இணையதளம், 0431 2670460 தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
News September 5, 2025
திருச்சியில் இருந்து சென்னை ரயிலில் செல்கிறீர்களா?

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த சோழன் விரைவு ரயில், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய சேது எக்ஸ்பிரஸ், போட் மெயில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் வண்டிகள் வரும் பத்தாம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.