News September 1, 2025
தி.மலை: ஆற்றில் குளித்த சகோதரர்கள் பலி

தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மல்லப்பா நாயக்கன் பாளையம் கிராமத்தில் எரி இருக்கிறது. இந்த ஏரியில் நேற்று குளிப்பதற்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தனுஷ் (8) ஹரிமோனிஷ் (6) ஆகிய 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News September 4, 2025
தி.மலை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக (செப்டம்பர்.03) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News September 3, 2025
ஆவணி மாத பௌர்ணமி கிரிவல நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 1:41 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 8, திங்கட்கிழமை இரவு 11:38 மணிக்கு முடிவடையும். அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சமேத திருக்கோயில் நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பக்தர்கள் இந்த புனிதமான நேரத்தில் கிரிவலம் வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனின் அருளைப் பெறலாம்.
News September 3, 2025
தி.மலை: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

தி.மலை மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <