News September 1, 2025

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு: குளிக்க தடை.

image

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இன்று (ஆக.31) மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, அருவியில் குளிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Similar News

News September 3, 2025

தர்மபுரியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

தர்மபுரியில் லோன் வாங்குபவரா நீங்கள்?

image

தர்மபுரி மக்களே, நம்முடைய அவசரத் தேவைக்கு ஆன்லைன் லோன் ஆப் மூலம் லோன் வாங்கி விடுகிறோம். ஆனால், அதனை உரிய நேரத்தில் கட்ட முடியாமல் போய் விடும். இதனால் அந்த நிறுவனங்கள் நமக்கு அதிக வட்டி விதிப்பது, நம்முடைய புகைப்படங்களை மார்ப் செய்வது, நம்முடைய உறவினர்களுக்கு ஃபோன் செய்து மிரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் 1930 என்ற எண்ணிலோ <>இந்த லிங்கிலோ<<>> புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

தர்மபுரி ஊடக வளர்ச்சி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 70 ஜீப் ஓட்டுநர் 33 பதிவுத்துறை எழுத்தர் 151 அலுவலக உதவியாளர் 83 இரவு காவலர் உட்பட 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு www.trd.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!