News September 1, 2025

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு: குளிக்க தடை.

image

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இன்று (ஆக.31) மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, அருவியில் குளிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Similar News

News November 14, 2025

தருமபுரி: ரயில் சேவையில் மாற்றம்!

image

தருமபுரி மார்க்கத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் நவ.16ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் தருமபுரி வழியாக செல்லாமல், திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-காரைக்கால் (16529) ரயில், பையனப்பள்ளி வழியாக சேலம் செல்லும். பெங்களூர்-கோவை வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

image

தருமபுரி பெண்களே, குமுதா மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தருமபுரியிலேயே செவிலியர் பணி தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!