News September 1, 2025
சேலம் வழியாக மதுரை-ப்ரௌனி இடையே சிறப்பு ரயில்கள்

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்.10 முதல் நவ.29 வரை சேலம் வழியாக மதுரை- ப்ரௌனி இடையே சிறப்பு ரயில்கள் (06059/06060) அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன்கிழமைதோறும் மதுரையில் இருந்து ப்ரௌனிக்கும், சனிக்கிழமைதோறும் ப்ரௌனியில் இருந்து மதுரைக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
Similar News
News September 3, 2025
சேலம்: முன் அனுமதி பெற வேண்டும் காவல் ஆணையாளர்!

சேலம் மாநகர எல்லைக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, பேரணி மேற்கொள்ளவோ, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ, குறிப்பிட்ட நாட்களுக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
News September 3, 2025
சேலம் : இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகராட்சியில் 3.09.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News September 3, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.