News September 1, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (31.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
கோவை மாவட்டம் உருவான வரலாறு!

கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் என பெயர் பெற்ற கூறப்படுகிறது .ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். அதன் பின் 1866ஆம் ஆண்டில் கோவை நகராட்சியாக தரம் உயர்ந்தது. கொங்கு மண்டலத்தின் இதயமென அழைக்கப்படுவது கோவை என்றால் மிகையாகாது.(SHARE பண்ணுங்க)
News September 1, 2025
ஆவின் பால் முகவர்கள் உரிமம் – புதுப்பிக்க அறிவிப்பு

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 635 சில்லறை பால் விற்பனை முகவர்களில் 333 பேர் மட்டுமே இதுவரை உரிமத்தை புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள முகவர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 11-ந்தேதியிலிருந்து உரிமம் புதுப்பிக்காத முகவர்களுக்கு கமிஷன் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
ஆன்லைன் முதலீடு மோசடி: ரூ.71 லட்சம் இழந்த முதியவர்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த முருகேசன் (62) என்பவரிடம், சஞ்சய் ரெட்டி மற்றும் லாவண்யா ஆகியோர் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.71 லட்சத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், சொன்னபடி பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகேசன் நேற்று குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.