News August 31, 2025
வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பாதுகாப்பு நடவடிக்கை

வேலூர் மாவட்ட காவல்துறையால் ,ஆகஸ்ட் 31 2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Similar News
News September 3, 2025
மனித உரிமைகள் பிரிவு காவல்துறை கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமையில், வேலூர் சரகத்தில் நிலுவையில் உள்ள SC/ST வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய பண பலன்களை விரைந்து கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்பன குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் சரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
News September 3, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர்-03) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 67 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News September 3, 2025
வேலூர்: WFH ரூ.30,000 சம்பளத்தில் வேலை

வேலூர் மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து <