News April 9, 2024
மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்.15ல் தொடக்கம்

புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்ட உத்தரவில், இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளத்தை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியது போல், வரும் ஏப்ரல். 15 ஆம் தேதி முதல் ஜூன்.14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
புதுவை: சீருடை பணியாளர்கள் நிலுவை படி குறித்து அறிவிப்பு

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவை அரசின் 7-வது ஊதிய குழுவின் படி சீருடை பணியாளர்களுக்கு, சீருடை உள்ளிட்ட பல்வேறு படிகளை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுவை காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினருக்கு 1.7.2017 முதல் 31.3.2021 வரை நிலுவையில் உள்ள சீருடை படி வழங்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
“விரைவில் ஆதார் அடிப்படையில் இலவச அரிசி” – அமைச்சர் தகவல்

காரைக்காலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், “அரசின் இலவச அரிசியானது உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.வேறு யாரும் இதனால் ஆதாயம் அடையக் கூடாது என்ற நோக்கில் ஆதார் அடிப்படையில் அரசின் இலவச அரிசியானது வழங்க உத்தேசிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
News July 8, 2025
புதுச்சேரி: மணல் லாரி மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஊசுடு ஏரிபகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அருகில் காலை 8 மணி அளவில் மணல் ஏற்றி வந்த லாரி, அவ்வழியே தந்தையோடு பள்ளிக்கு சென்ற இரண்டு மாணவர்களின் மீது மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் உயிரிழந்தனர். இதனால், அந்த மானவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 3 மணி நேரம் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.