News August 31, 2025
ஆஸி.,யில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறி, ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் பேரணி நடத்தியுள்ளனர். இதை தடுக்க அரசியல்வாதிகளுக்கு தைரியம் இல்லை எனவும், இந்த மாஸ் குடியேற்றத்தை தடுக்க ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். ஆனால், இவர்கள் நாட்டில் இன்வெறியையும், வெறுப்பையும் பரப்புவதாக அரசாங்கம் சாடியுள்ளது.
Similar News
News September 3, 2025
வைரஸ் பரவலுக்கு பயப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை

தமிழகத்தில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் பரவவில்லை எனவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 3, 2025
மிலாடி நபி விடுமுறை.. இன்று முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

மிலாடி நபி, வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு இன்று முதல் 5-ஆம் தேதி வரை 1,475-க்கும் அதிகமான பஸ்களும், 7-ஆம் தேதி பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 875 பஸ்களும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.
News September 3, 2025
SCIENCE: இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமுடியுமா?

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி அதற்கு மீண்டும் உயிர் கொடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. Cryonics என அழைக்கப்படும் இந்த முறையில், இறந்தவர்களின் உடலில் உள்ள உறுப்புக்கள் முதலில் பதப்படுத்திவைக்கப்படுகிறது. இறந்த உடல்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கான வழியை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், இதுவரை 500 உடல்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.