News August 31, 2025
நீலகிரியில் நாளை முதல் இரண்டாம் சீசன் துவக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சுற்றுலா சீசன்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதல் சீசன் மார்ச் இறுதி வாரம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரையும், இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையும் நடைபெறும். இந்த நிலையில், இரண்டாம் சீசன் நாளை தொடங்குகிறது. இதனால், நாளை முதல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 1, 2025
நீலகிரி: 10th படித்தால் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ‘ Broadband Technician’ பயிற்சி நீலகிரியிலேயே செப்.3ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், பயிற்சியில் இடம்பெற்றால் வேலை உறுதி. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News September 1, 2025
’மலைகளின் ராணி’ நீலகிரி உருவான கதை!

நீலகிரி என்றால் ’நீலமலை’ என்று பொருள். தமிழின் தொன்மையான இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இந்தப் பெயரைக் காண முடியும். 1818ஆம் ஆண்டில், அப்போதைய கோவை ஆட்சியர் ஜான் சுல்லிவன் தனது உதவியாளர்களுடன் கோத்தகிரியைக் கண்டறிந்தார். நீலகிரியின் இயற்கை வளங்கள், நீர் நிலைகளுக்கு மூலதனம் அவரே. மேலும் பூர்வகுடி மக்களுக்கு பட்டா, சிட்டா வழங்கி ‘உழுபவருக்கே நிலம்’ என அறிமுகம் செய்தார்.
News September 1, 2025
நீலகிரி: விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

உதகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக அரங்கில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது . எனவே விவசாயிகள் தங்களுடைய விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை 5 தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் தபால் பெட்டி 72 , உதகை 643001 முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.