News August 31, 2025

மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள்: பணிகள் முடக்கம்.

image

விழுப்புரம் உட்பட ஆறு மாவட்டங்களில், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், அலுவலகக் கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதால், சுகாதார மற்றும் ஊரகப் பணிகள் ஆய்வு முடங்கிப் போயுள்ளன. எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 4, 2025

விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்

image

பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, செப்.7 காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.45 மணிக்குத் தி.மலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

image

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளர் ஒருவரை திமுகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News September 4, 2025

விழுப்புரம்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!