News April 9, 2024
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

இன்று தர்மபுரி மாவட்டம் கூத்தமடை காலனி பகுதியைச் சார்ந்த ராசாத்தி (23) அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் தர்மபுரி 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது ராசாத்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சசிகலா ராசாத்திக்கு பிரசவம் பார்த்தார். அதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அவசரகால ஓட்டுநர் இளையராஜா பத்திரமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News March 16, 2026
தருமபுரி: சனி தோஷம் நீக்கும் சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை நேரில் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தடைகள், சனி தோஷம் போன்ற பல பிரச்சனைகள் நீங்கி செல்வம் கிடைக்கும்.நந்தியின் காதில் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே தருமபுரி மக்களே அருகே உள்ள சிவன் கோயிலுக்கு மறக்காம போங்க
News March 16, 2026
தருமபுரி: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
News March 16, 2026
தருமபுரி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

▶️ தருமபுரி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். ▶️ இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ▶️ அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். *இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*


